Homeசெய்திகள்ஆவடிஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

-

திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய வாக்குச்சாவடிகளில் மக்கள் ஜனநாயக கடமையாக கருதி வாக்களித்து வருகின்றனர்.

ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒவ்வொரு வாக்களிக்கும் அறை நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு மையங்களுக்கு செல்லும் முன்பே 100 மீட்டர் 200 மீட்டர் தொலைவுகளில் போலீசார் நிறுத்தப்பட்டு சோதனைகளுக்குப் பின்பு வாக்காளர்கள் வாக்கு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆவடி அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7:00 மணி முதலே மக்கள் தங்கள் அருகாமையில் அமைந்துள்ள வாக்கு மையங்களுக்கு சென்று அமைதியான முறையில் இதுவரை வாக்களித்து வருகின்றனர்.

ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

ஆவடி காவல் ஆணையரகம் செயல்படுத்தப்பட்ட பின் முழு காவல் பாதுகாப்புடன் நடத்தப்படும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ