spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் - கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

-

- Advertisement -

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் - கைது

சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி/62  இவர் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியை.கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக தொடர்பு கொண்டு,உங்களது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கு மாறும், அதனை ரிசர்வ் பேங்க் அதிகாரிகள் சோதனை செய்து வங்கி கணக்கில் உள்ள பணம் முறையானதா அல்லது மோசடி பணமா என்பதை கண்டுபிடிப்பார்கள் எனக்கூறி உள்ளனர்.

we-r-hiring

பின்னர் அவர்கள் அவரை வற்புறுத்தி அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை இவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு  பணத்தை அனுப்ப கூறியுள்ளனர். இதையடுத்து மேரி ஜெனட் டெய்சி இவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.38 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதன் பிறகு அவருக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேரி ஜெனட் டெய்சி ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.

காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, அண்ணாநகர்,ஹெச் பிளாக், பொன்னி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிஜாய்/33 என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் 13 வங்கி கணக்குகளை தொடங்கி சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் என கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதும்,இவர் மீது நாடு முழுவதும் 135 மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.இவரிடம் இருந்து கைப்பேசி, மடிக்கணினி, காசோலை, கிரிடிட் கார்டு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் பிஜாயை  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி – கைது

MUST READ