spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

-

- Advertisement -

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ஆவடியில் ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆவடி கார் பணிமனை தொழிலாளர்களுடனான சிறப்பு கூட்டம் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ரயில்வே நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்க கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது,காரணம் நாம் அவர்களை எதிர்த்து போராடியதின் விலைவு தான் என கூறினார். இந்திய அரசாங்கத்திற்கு ரயில்வே சொந்தமாக இருக்கிறபோது தான் அரசு ஊழியர்களாக இருக்க முடியும், பதவி உயர்வு, ஓய்வு ஊதியம் உள்ளிட்டவை கிடைக்கும் எனவும் தனியார் வசமானால் இவை எதுவும் கிடையாது என குறிப்பிட்டார்.

we-r-hiring

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்வேயில் தொழிற்சங்கங்களை அங்கிகரிக்க ரகசிய வாக்கெடுப்பு வருகின்ற டிசம்பர் 4, 5 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இதில் SRMU மகத்தான வெற்றி பெறுவதற்கான ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. ரயில்வே தனியார் மயமாக்கினால், ரயில்வே ஊழியர்களுக்கு ஏற்பட கூடிய ஆபத்து குறுத்து பேசினார்.

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ரயில்வே தொழிலாளர் விரும்புகிற பதவியை 2023ம் ஆண்டு மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும்,ஆனால் அதை தள்ளி போடுகிறது.எனவே அந்த பதவிகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2026ம் ஆண்டு புதிய சம்பளத்தை பெற கூடிய உரிமையை ரயில்வே தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது,எனவே 8வது சம்பல கமிஷன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்த நிலையில் SRMU அமல்ப்படுத்த விடாமல் தடுத்தது போல தொடர்ந்து அதனை தடுப்பதற்கு தொழிலாளர்களின் ஆதரவு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

MUST READ