மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15% ஆக உயர்தியதைத் தொடர்ந்து , சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 ஆதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (மே 12, 2026):
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை மாற்றங்கள் பின்வருமாறு:

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கும், சவரன் ரூ.1,23,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ஒரு கிராம் ரூ.330க்கும் கிலோவுக்கு ரூ.30,000 உயர்ந்து 1 கிலோ வெள்ளி ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 550,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெரினாவில் மீண்டும் அரசியல் அதிரடி: ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தலைவர்கள் – தொண்டர்கள் உற்சாகம்!
