spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு

-

- Advertisement -

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு

கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

metro train
metro train

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மூன்று வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புறநகரை இணைக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும் மூன்று வழிதடங்களையும் நீடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் நடைபெற்று வரும் மூன்றாவது வழிதடத்தில் 26 கி.மீ தொலைவிற்கு சிப்காட்டில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் நான்காவது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் புதிய விமான நிலையம் வர உள்ள பரந்தூர் வரை 50 கி.மீ தொலைவிற்கும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தில் 17 கி.மீ தொலைவிற்கு கோயம்பேடு முதல் திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரையிலும் என மொத்தம் 93 கி.மீ தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் நீட்டிக்கப்பட உள்ளது.

we-r-hiring

இந்த மூன்று புதிய நீட்டிப்பு வழித்தடங்களுக்கான சாத்திய கூறு ஆய்வு பணிகள் (DFR) கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான வழிதடத்தை தவிர மீதமுள்ள இரண்டு வழித்தடங்களுக்கான முழு ஆய்வுப்பணிகள் DFR நிறைவடைந்துள்ளது. அவை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பூந்தமல்லி முதல் பரந்தூர் வழித்தடத்திற்கான DFR பணிகளை நிறைவு செய்ய மட்டும் இன்னும் சில வாரங்கள் ஆகும் என மெட்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ