ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.
துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர், செங்குன்றம், திருநின்றவூர் உள்ளிட்ட 25 காவல் எல்லையில் அதிரடி சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கூண்டோடு அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் கூறினார்.
பல்வேறு வழக்குகளில் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை வீடு தேடி சென்று கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், நேற்று குற்றவாளிகளின் வீடுகளுக்கு துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தனர்.
சுமார் ஆயிரம் குற்றவாளிகள் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று கைது செய்யும் நடவடிக்கை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்..