சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும். ஒரு சில வாரங்களில் இதற்கான டெண்டர் விடப்பட உள்ள நிலையில் செப்டம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார் கும்டா உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாா்.
சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் அளித்துள்ள பேட்டியில், ”தலைநகரான சென்னையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பலரும் வசித்து வருகிறார்கள். கல்வி,மருத்துவம், வேலைவாய்ப்பும் மற்றும் சுற்றுலா என மிக சிறந்த பொழுதுபோக்கு நகரமாக கருதப்படும் சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் வசிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் பொது போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்டவை இருக்கும் பட்சத்திலும் பொதுமக்கள் தங்களின் தனிநபர் வசதிக்காக பைக் மற்றும் கார்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் நடப்பாண்டு கணக்கின்படி சென்னையில் மட்டும் 14 லட்சம் தனிநபர் கார்கள், 76 லட்சம் தனிநபர் இரு சக்கர வாகனம், 2 லட்சம் ஆட்டோகள் இயங்குகிறது. இதைத் தவிர்த்து வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் என அதிக அளவிலான வாகனங்கள் சென்னையில் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக பார்க்கிங் வசதி பார்க்கப்படுகிறது. பிரதான சாலைகள் முதல் குடியிருப்பு பகுதிகள் வரை வாகனம் நிறுத்ததற்காக ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.
இது போன்ற பார்க்கிங் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியோருடன் இணைந்து ‘ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்’ என்ற புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதன் முதல் பரிசோதனை முயற்சியாக அதிக நெருக்கடிகளை சந்திக்கும் அண்ணா நகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள ஆறு பிரதான சாலைகளும் மேலும் அங்குள்ள 17 இரண்டாம் கட்ட சாலைகளும் சேர்த்து மொத்தம் 25 கிலோமீட்டருக்கு சாலையோர ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு என பிரத்தியேக 1200கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது அதோடு பிரத்தியேக செயலியும் உருவாக்கப்படுகிறது. ஷிப்ட் முறையில் 100 ஊழியர்கள் இதனை கண்காணிப்பார்கள் எனவும் செயலியின் மூலமும் அல்லது பார்க்கிங் அருகே பொருத்தப்பட்டுள்ள UPI செயல்பாட்டை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம்.
ஒரு மணிநேரம் வாகனம் நிறுத்த இருசக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்காணிப்பு கேமராவுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு தான் முதன்முறையாக செயல்படுத்து உள்ளதாகவும் இது வெற்றியடையும் பட்சத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவு படுத்தப்படும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்”.
ஆக்டர் விமல் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை துவக்கம்…