போலி நகைகளை அடகு வைத்த ஒருவரை கட்டி வைத்து நீடாமங்கலம் போலிசாரிடம் ஒப்படைத்த நகை கடை உரிமையாளர்கள் போலி நகை அடகு வைத்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலிசார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி தரிசுவேல கிராமத்தை சேர்ந்த வீரசேகரன் (29). இவர் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் ஏற்கனவே 6 போலி மோதிரங்கள் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று ஒரு மோதிரம் அடகு வைக்க வந்துள்ளார். அப்போது அடகு கடைகாரருக்கு சந்தேகம் எழுந்துள்ளது பின்னர் வீரசேகரன் தப்பிக்க முயன்ற போது அந்த பகுதியில் உள்ள நகை கடைகாரர்கள் வளைத்து பிடித்து கையை கட்டி வைத்து அடித்து நீடாமங்கலம் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து போலிசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த வினோத் (35) என்பவர்தான் அடகு வைக்க சொன்னதாக வீரசேகரன் கூறியுள்ளார். இவர்கள் ஏற்கனவே மேலும் மூன்று கடைகளில் போலி நகைகள் அடகு வைத்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது .
இது தொடர்பாக நீடாமங்கலம் தனியார் அடகு கடையை சேர்ந்த சாந்திலால் மேத்தா (47) நீடாமங்கலம் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் வினோத் ,வீரசேகரை விசாரித்த நீட்டாமங்கலம் ஆய்வாளர் சந்தனமேரி , உதவி ஆய்வாளர் உஷா ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலி நகை அடகு வைத்து மோசடி செய்ததாக 2 பேரையும் கைது செய்து . நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்
நீடாமங்கலம் அருகே போலி நகைகளை தனியார் நகைக் கடைகளில் அடகு வைத்து ரூ 3 லட்சம் மோசடி செய்த சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.