மாங்காட்டில் பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து இரும்பு கம்பிகளை திருடி செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாங்காடு அடுத்த ஜனனி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியிலிருந்து அடிக்கடி இரும்பு கம்பிகள் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து கம்பெனி உரிமையாளர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இரண்டு பேர் சர்வசாதாரணமாக கம்பெனிக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒருவர் அதில் அமர்ந்திருக்க மற்றொருவர் அங்கும் இங்கும் பார்த்து விட்டு அந்த கம்பெனியின் இரும்பு கேட்டின் மீது சர்வ சாதாரணமாக எகிறி குதித்து உள்ளே சென்று இரும்பு கம்பிகளை எடுத்த வந்த நிலையில் இருவரும் அதனை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கம்பெனியிலிருந்து இரும்பு கம்பிகளை திருடி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கம்பெனியின் இரும்பு கேட்டை எகிறி குதித்து மர்ம நபர்கள் இரும்பு கம்பிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் சுகுமாரன் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு