spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…

மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…

-

- Advertisement -

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி சாா்பில் மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் துணை பொது செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனா்.மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…கீழடியில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் 2014 முதல் 2017 வரை மூன்று கட்டங்களாகவும், 2017 முதல் 2025  தமிழக அரசு ஏழு கூட்டங்களாக அகழாய்வு நடத்தியுள்ளது. கீழடியில் கடந்த 10 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்ற நிலையில், ஒன்றிய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடவில்லை. ஒன்றிய அரசு மேற்க் கொண்ட அகழாய்வு முடிவுகளை வெளியிட கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற போது தமிழ் தான் தொன்மையான மொழி என்று கீழடி அகழாய்வு நிரூபணம் செய்துள்ளது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கீழடி அகழாய்வினை அங்கீகரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார்… நைனைருக்கு காங்கிரஸ் பதிலடி

we-r-hiring

 

MUST READ