- Advertisement -
நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஷ்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஸ்கரின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். குறிஞ்சிப் பாடியில் காய்கறி இலவசமாக தரமறுத்த கடைக்காரா் ரமேஷ் என்பவரை சுபாஷ்கா் நேற்று வெட்டிவிட்டு தப்பியுள்ளாா்.
தப்பித்துச் சென்ற சுபாஷ்கரை போலீசாா் தீவிரமாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அம்முயற்சியின் போது போலீசாா் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளாா் ரவுடி சுபாஷ்கா். வேறு வழியின்றி தற்காப்பிற்காக சுபாஷகரை போலீசாா் சுட்டனா். அதில் படுகாயமடைந்த ரவுடி நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.



