
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன.15) மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோயில் நடைத் திறக்கப்பட்ட நிலையில், 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகரவிளக்கு பூஜை இன்று (ஜன.15) நடைபெறுவதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் சபரிமலைக்கு இன்று மாலை கொண்டு வரப்படும். அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வெர்ச்சுவல் கியூ முன்பதிவை 80,000- லிருந்து 40,000 ஆக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு குறைத்துள்ளது. மேலும், இன்று காலை 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்படுகின்றன. கூட்டத்தை சமாளிக்க சபரிமலை, புல்லுமேடு உள்ளிட்ட பகுதிகளில் 10,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!
மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களின் வசதிக்காக, பம்பையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.