spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி

-

- Advertisement -

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் “பேனா” சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு முனைப்பு காட்டியது.

இந்த சூழலில் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்ற வகையில், சென்னை மெரினா கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பேனா சின்னம் அமைப்பது கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை ஆகும்.

we-r-hiring

அதைப் போல காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படும் இந்த காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமான திட்டங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே, பேனா சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும், இந்தியா முழுவதுமாக 6,632 கிலோமீட்டர் அளவுக்கு கடற்கரை உள்ளது. இதில் 33.6 சதவிகிதம் அளவுக்கு கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ளன.

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி
பேனா நினைவுச் சின்னம்

எனவே நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்கு தடை விதிப்பதோடு, கடல் அரிப்பை தடுக்கும்  விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயசுகின், இதே போல் மற்றொரு மனு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தேவையற்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருவதால், மனுதாரருக்கு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது என்று சுட்டி  காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ” இது என்ன மாதிரியான மனு? இதை ஏன் தாக்கல் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். தொடர்நது சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இந்த மனுவில் தாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவு பிறப்பித்தார்.

MUST READ