பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டி.சூரபட்டில் நாளை நடைபெறுகிறது.


சூரியன் எப் எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென்ன மெகா ஓவியப் போட்டி நாளை நடக்கிறது.பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சூரியன் எப் எம் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டி நாளை சூரபட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் நாளை நடைபெறுகிறது.

போட்டிக்கு நுழைவு கட்டணம் இலவசம். காலை 9 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படும். போட்டியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கார்ட்டூன் தலைப்புகள், இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மரங்களை காப்போம் என்ற தலைப்பிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எனது விடுமுறை காலம் என்ற தலைப்பிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழ்கடல் அதிசயம் போன்ற தலைப்புகளும் ,கொடுக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.
மாணவர்கள் 8678935935 என்ற எண்ணில் வர்ணஜாலம் என்ற வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு APC NEWSTAMIL சார்பில் வாழ்த்துக்கள்.


