Homeசெய்திகள்ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

-

ஆவடி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ஆம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் பிரணா (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்வி என்கின்ற (4) பெண் குழந்தை உள்ளனர்.

நேற்று இரவு ஜார்ஜ் மதுபோதையில் இரவு வெளியே செல்ல வேண்டும் என்று கூறியதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மன உளைச்சலில் இருந்த ஜார்ஜ் படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொள்வதாக கூறி படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.

மனைவி எப்பொழுதும் இதே போல் தான் கூறி விட்டு செல்வார் ஆனால் ஏதும் செய்து கொள்ள மாட்டார் என்று இருந்தார் சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லாததால் மனைவி சந்தேகமடைந்து படுக்க அறைக்கு சென்று பார்த்த போது  ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இவரது அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜார்ஜை மீட்டு சொந்த காரில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜார்ஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது உடலை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மனைவி பிரணாவிடம் குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவலர் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ