விழுப்புரம்:
ஆடிட்டர் குருமூர்த்தி – சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் ‘டிரா’வில் முடிந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது.
இந்த முட்டல், மோதல் தொடர கடந்த ஏப்ரல் மாதம் பூதாகரமாக வெடித்தது.. கடந்த இரண்டு மாதகாலமாகவே தினசரியும் நிர்வாகிகளுடனான ‘இனி நானே பாமகவின் தலைவர்’ என்று பரபரப்பை கிளப்பினார் ராமதாஸ். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இதனிடையே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி – சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் ‘டிரா’வில் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தேர்தலுக்கு பிறகு, அன்புமணி தலைவர் பதவி உள்பட அனைத்தையும் எடுத்துகொள்ளட்டும். 40 – 50 தொகுதிகளில் நாம் வலுவாக இருந்தால் தான் கூட்டணி பேச முடியும். வெற்றி பெற முடியும். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நான், ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சென்றபோதே, அவருக்கு கட்சியை எடுத்துகொள்ள வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
சௌமியா பேசியதற்கு இணங்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால், என் குடும்பத்து பெண்கள் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. அன்புமணி என் பேச்சை கேட்காமல் இருப்பதற்கு பாஜக பின்புலம் கிடையாது.
எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து கட்சியின் தலைவர்கள் இணைந்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளா டாக்டர் ராமதாஸ், அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கண்டிப்பாக நீக்கமாட்டேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.