spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பெரியார் மண்ணில் மண்டியிட்ட சீமான் கட்சி… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..?

பெரியார் மண்ணில் மண்டியிட்ட சீமான் கட்சி… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..?

-

- Advertisement -

தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி, உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இப்போது எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு இடைத்தேர்தல்களுக்கான வாக்குகள் காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகளுடன் தொடங்கின. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்பட்டன.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

we-r-hiring

கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறந்ததைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அவசியம் ஆனது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் 44 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும், முக்கியப் போட்டி திமுகவின் வி.சி. சந்திரகுமாருக்கும், நாம் தமிழர் கட்சியின்எம்.கே. சீதாலட்சுமிக்கும் இடையேதான். பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின, இருப்பினும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாஜக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. திமுகவின் சந்திகுமார் 18773 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.நாதக வேட்பாளர் 2268 வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பைசாபாத்தில் (அயோத்தி) வெற்றி பெற்ற பிறகு சமாஜ்வாதி கட்சி எம்.பி.அவதேஷ் பிரசாத், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்தார். இதனால் மில்கிபூரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2022 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய பாஜக எம்.எல்.ஏ. கோரக்நாத்தை தோற்கடித்து எம்.பி. அவதேஷ் பிரசாத் அந்த இடத்தை வென்றார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மில்கிபூர் தொகுதி இருப்பதால், இடைத்தேர்தல் சமாஜ்வாதி கட்சிக்கும், உத்தரபிரதேசத்தின் ஆளும் பாஜகவிற்கும் இடையிலான கௌரவப் போராக மாறியது. பத்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் முக்கிய போட்டி சமாஜ்வாதி கட்சியின் அஜித் பிரசாத்- பாஜக வேட்பாளர் சந்திரபானு பாஸ்வான் இடையே உள்ளது.

மில்கிபூர் தொகுதியில் மொத்தம் உள்ள 3.71 லட்சம் வாக்காளர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிப்ரவரி 5 அன்று வாக்களித்தனர், இது 2022 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவை விட அதிகமாகும்.2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில், அயோத்தி மாவட்டத்தில் பாஜக இழந்த ஒரே இடம் மில்கிபூர் மட்டுமே. தற்போதைய நிலவரப்படி மில்கிபூரின் நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது. பாஜக 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபானு பாஸ்வான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

 

MUST READ