spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

-

- Advertisement -

வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் எனக்கூறி பேட்டி அளித்து வருவதாக குற்றச்சாட்டு. நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது  வழக்கறிஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

பிரபல சினிமா நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

we-r-hiring

குறிப்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனை அடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த  நடிகை கஸ்தூரியை தேடிவந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‌

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப்பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்னும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

அந்த கடிதத்தில் கடிதத்தில் வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் நீதிமன்றத்திலும் பொது இடங்களிலும் பொய்யாகவும் தவறாகவும் என்னால் முன்னிறுத்தப்பட்டதாக கூறி வருகின்றார்.அது முற்றிலும் பொய்யான தகவல் எனது வழக்கறிஞர் என்கிற முறையில் நான் நியமனம் செய்தது கார்த்திக் ராஜா என்பவரை மட்டும் தான் எனவே பிரபாகரன் நான் நியமிக்கப்பட்டதாக கூறி வருவதை தடுத்து நிறுத்து வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி வரும் வழக்கறிஞர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு தெரிவித்துள்ளார். நேற்று கஸ்தூரி ஜாமின் குறித்து பேசிய வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் இல்லை எனக் கூறி நடிகை கஸ்தூரி கடிதம் எழுதியுள்ள சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

குறிப்பு . நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் பிரபாகரன் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக இருந்தவர் ‌. அதுமட்டுமின்றி வழக்கறிஞர் பிரபாகரன் நடிகை  கஸ்தூரிக்கு நான் தான் வழக்கறிஞர் என கூறி இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்ததும், கஸ்தூரிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாக பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ