- Advertisement -
ஆகஸ்ட் 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமை அறிவித்துள்ளது.