spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதிமுக எம்.பி கணேச மூர்த்தி மறைவு - எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

மதிமுக எம்.பி கணேச மூர்த்தி மறைவு – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

-

- Advertisement -

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு அதிமுகப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் சல்பாஸை தண்ணீரில் கலந்து குடித்ததில் சுயநினைவின்றி சரிந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த 48 மணி நேரத்திற்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான திரு. அ. கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

 

MUST READ