spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல் - பெட்ரோல் குண்டு வீச்சு!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல் – பெட்ரோல் குண்டு வீச்சு!

-

- Advertisement -

ஆவடி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், சவுண்ட் சர்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அம்பத்துார் பகுதி நொளம்பூர் வேணுகோபால் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார், உறவினர்கள், நன்பர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.. அப்போது நண்பர்கள் சிலர் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.. இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.‌ இதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அதே பகுதியில் உள்ள டெரி என்கிற சபரி தாசன் என்பவருக்கு சொந்தமான சவுண்ட் சர்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றது. இதில் சவுண்ட் சர்வீஸ் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின.

இது தொடர்பாக நொலம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட அசோக் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் தப்பி ஓடிய சரித்திர பதிவேடு குற்றவாளியான தனுஷ் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ