ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை
திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரபேல் வாட்ச் பில்லை செய்தியாளர்களுக்கு காட்டினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் இந்தியாவில் 2 பேரிடம்தான் உள்ளது. ஒரு வாட்ச் மும்பையில் ஒரு நண்பரிடம் உள்ளது. மற்றொரு வாட்ச்சை 2021 இல் கோவை சேரலாதன் ராமகிருஷ்ணன் வாங்கினார். அவரிடம் இருந்து ஆசைப்பட்டு, மே மாதம் நான் வாங்கினேன். 3 லட்சம் ரூபாய் விலை.

ஒன்று என்னிடம் உள்ளது, மற்றொரு வாட்ச் மும்பையில் உள்ள ஒருவரிடம் உள்ளது. நான் கட்டியுள்ள வாட்ச்சின் ஒரிஜினல் ஓனர் கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணன். அவரிடமிருந்து கடந்த மே மாதம் இந்த வாட்ச்சை வாங்கினேன். காவல் பணியிலிருந்தபோது லஞ்சப்பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர்.
ரபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்ச்சை நான் வாங்கினேன். அவதூறுகளை அள்ளி தெளிப்பதற்காக வரவில்லை. நான் சொல்வதற்கு ஆதாரம் இல்லை. முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் அரசியலில் எனக்கு ரூ.7 முதல் 8 லட்சம் மாதத்திற்கு செலவாகிறது. என் உதவியாளர்களுக்கான ஊதியத்தை என்னுடன் படித்த நண்பர்களே கொடுக்கின்றனர். வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் ” என்றார்.