பாஜக பிரமுகர் கொலை – நடவடிக்கை எடுக்க அண்ணாமலை கோரிக்கை
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசார், ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.