spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

சென்னை தாம்பரத்தில் இன்று (செப்.15) மாலை 06.00 மணிக்கு நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.

we-r-hiring

விநாயகர் சதுர்த்தி : சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. தி.மு.க. இரண்டரை ஆண்டுகளில் ரூபாய் 2.73 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாளுக்கு நாள் போதைப் பழக்கம் அதிகமாவதால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாகத் திகழ்கிறது.

“ரூபாய் 12.82 கோடி சொத்து ஆவணம், ரூபாய் 56.86 லட்சம் தங்கம் பறிமுதல்”- அமலாக்கத்துறை தகவல்!

தி.மு.க. அரசின் ஏவல்துறையாக காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் செயல்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க., ஒன்றைக் கூட செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பால் மற்றும் அதன் உபபொருட்களின் விலையை தி.மு.க. அரசு பலமுறை உயர்த்தியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ