
மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கிய 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளது.
“காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!
“தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்கள் மற்றும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
“வி.ஏ.ஓ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாராட்டு!
நீர்வளத்துறை அதிகாரிகள், அரசு சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், கிடைத்த சுமார் 12.82 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், கணக்கில் வராத 2.33 கோடி ரூபாய் பணம் மற்றும் ரூபாய் 56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது”. இவ்வாறு அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.