Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

-

- Advertisement -

 

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
File Photo

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டுக்கு சேவையாற்ற இஸ்ரேலிய மக்கள் விருப்பம்!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26ஆவது கூட்டம், டெல்லியில் இன்று (அக்.13) மதியம் 02.00 மணிக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா.வின் கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடகா அரசின் நீர்வளத்துறைச் செயலாளர், “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்துள்ளது” என்றார்.

MUST READ