Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

-

 

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை பாரிமுனை, அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளிகளில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், பெற்றோர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாமென பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, பெற்றோர்கள் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

MUST READ