Homeசெய்திகள்தமிழ்நாடுபூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!

பூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!

-

 

பூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸை சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ்

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் கல்லூரி மாணவன் பகவதி சிக்கன் ரைஸ் வாங்கியுள்ளார். இதனை தனது தாத்தா சண்முகநாதன், தாய் நதியாவுக்கு கொடுத்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சண்முகநாதன் உயிரிழந்த நிலையில், அவரது மகள் நதியாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…

உடல்நலப்பாதிப்புக்கு காரணமாக இருந்த சிக்கன் ரைஸை விநியோகித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் பூச்சு மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. உணவில் பூச்சு மருந்து கலக்கப்பட்டது எப்படி? யார்? கலந்தது என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

MUST READ