கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
கலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மரியாதை செலுத்த வரும்போது அப்பகுதியில் லேசான மழை பெய்ததால் குடை பிடித்துக் கொண்டு கலைஞரின் உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
https://x.com/mkstalin/status/1797507516709962138
இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, சாமிநாதன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.ராசா, தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.