spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"முதலமைச்சருக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது"- அண்ணாமலை ட்வீட்!

“முதலமைச்சருக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது”- அண்ணாமலை ட்வீட்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது.

we-r-hiring

தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் எல் ஜி எம்…… ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2014- ஆம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாகப் பேசி வருகிறார்.

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர்
நரேந்திர மோடி சொல்லவில்லை.

தி.மு.க.வினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை?

மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஷால்!

முதலமைச்சரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் தி.மு.க. அரசு? கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் தி.மு.க. அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.” இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

MUST READ