Homeசெய்திகள்தமிழ்நாடுபாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்

பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்

-

பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

dr

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று பயிற்சி மருத்துவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேஜ் அணிந்து பணியை புறக்கணித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் உள்ள பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் நேற்று பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உத்தரவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மருத்துவமனையில் பாலியல் தொல்லையில் சிக்கி மருத்துவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ