spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள்...

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

-

- Advertisement -

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர்.இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து உலகப் புகழ்பெற்றவர் மருத்துவர் கே.எம்.செரியன் (வயது 82). இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் காலமானார். மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்து காட்டியவர் கே.எம்.செரியன். இவரது மறைவையொட்டி  பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில் இவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் அறந்தாங்கி ரோடு முக்கம் அண்ணல் காந்தியடிகள் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் செரியனின் திருவுருவப்படத்திற்கு மனிதநேய நண்பர்கள் குழுவினர் முதலில் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து அவரது படத்திற்கு முன்பு நின்று மெழுகுவர்த்தி ஏந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மனிதநேய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

MUST READ