Homeசெய்திகள்தமிழ்நாடு102 மக்களவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு-ஆர்வமுடன் வாக்களித்து வரும் பிரபலங்கள்

102 மக்களவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு-ஆர்வமுடன் வாக்களித்து வரும் பிரபலங்கள்

-

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் ராஜஸ்தான் – 12, உத்தர பிரதேசம் – 8, மத்திய பிரதேசம் – 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் – தலா 5, பிஹார் – 4, மேற்கு வங்கம் – 3, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா – தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் – தலா ஒரு தொகுதி என நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், மனைவி துர்கா

வாக்குரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்-நடிகர் ரஜினிகாந்த்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிக‌ர் ரஜினிகாந்த் வாக்கு செலுத்த புறப்பட்டார்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசன்  வரிசையில் நின்று வாக்களித்தார்.
நடிகர் கமல்ஹாசன் வாக்களிக்க

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ், அவரது மனைவி கிரேஸ், மகன் கென் கருணாஸ் ஆகியோர் சாலிகிராமம் கரியப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ், அவரது மனைவி கிரேஸ், மகன் கென் கருணாஸ்

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கினை செலுத்தினார்.

கௌதம் கார்த்திக்

வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்தார்.மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார்

 

 சிவகார்த்திகேயன்

சென்னை நீலாங்கரை  வாக்குச்சாவடியில் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் வாக்கினை பதிவு செய்தனர்.

பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன்

சென்னை திருவான்மியூர்  வாக்குச்சாவடியில்   விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் வாக்களித்தனர்

ராதிகா மற்றும் சரத்குமார்

MUST READ