spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்... ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!

வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!

-

- Advertisement -

 

வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்... ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!
Photo: IAF

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தாங்கள் நிவாரணமாக வழங்க விரும்பும் பொருட்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இலவசமாக அனுப்பலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக, மத்தியக் குழுவினர் ஆய்வுச் செய்து வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கர்னல் கே.பி.சிங் தலைமையில் மத்திய குழுவினர் ஆய்வுச் செய்து வருகின்றனர்.

‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

இந்த குழுவில், நீர்வள அமைச்சக இயக்குநர் தங்கமணி, விவசாய கூட்டுறவு இயக்குநர் பொன்னுசாமி உள்ளிட்ட 5 பேர் ஆய்வுச் செய்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை செய்த மத்தியக் குழுவினர் ஆய்வுப் பணியைத் தொடங்கினர்.

MUST READ