Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் மகன் நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் மகன் நீக்கம்

-

- Advertisement -

ரூ.17 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மகன் அதிமுகவில் இருந்து நீக்கம்.அதிமுகாவின் முன்னால் அமைச்சர் மகன் நீக்கம்தூத்துக்குடி மாநகராட்சி 19ஆவது வார்டு கவுன்சிலராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தாா். அவருடைய சகோதரி பொன்னரசு என்பவர் ராஜாவின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்குகளை தருவதாக கூறினார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் நந்தம்பாக்கத்தில் உள்ள எனது கணவரது 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ 11 கோடி பெற்றுத் தந்தேன். எனக்கே தெரியாமல் அந்த பணத்தை ராஜாவின் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்.

மேலும், ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்குவதாகவும், அதில் முதலீடு செய்தாலும் அதிக பங்குகளை தருவதாக கூறியிருந்தார். இதனால் என்னுடைய 300 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதை ராஜா அடமானமானமாக வைத்து பணம் பெற்று அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தினை அவரது பெயரில் வாங்கிக்கொண்டார்.

தனக்கு லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ராஜாவும், அவரது மனைவியும் சேர்ந்து என் கையெழுத்தைப் போலியாகப் போட்டு அவர்களின் நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றிக்கொண்டனர் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்த போலீசார், தொடர்ந்து ராஜா, எந்த நேரத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கினர். இதையடுத்து கடந்த 10ம் தேதி மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ராஜாவை சென்னை விமான நிலையத்தில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜா, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், ரூ.17 கோடி மோசடி வழக்கில் கைதான தூத்துக்குடி தெற்கு பகுதி அதிமுக செயலாளர் ராஜாவை கட்சிக் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளாா் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், அதிமுகவினா் யாரும் ராஜாவுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளாா்.

ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

MUST READ