spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

-

- Advertisement -

திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

we-r-hiring

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னை – பூந்தமல்லி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பென்னலூர் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் கிடந்த உயிரிழந்த மாட்டின் மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. இதனிடையே, கடும் பனிப்பொழிவு காரணமாக பின்னால் வந்த 2 தனியார் ஆலை பேருந்துகள், காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து நான்கு வாகனங்களும் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில், காரில் வந்தவர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்கள் என 5க்கு மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்து காரணமாக, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ