spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில், மும்பையிலுள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அந்த உத்தரவில் மே 30-ஆம் தேதிக்குள் கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்றும் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

we-r-hiring

மேலும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும். அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அரசின் உத்தரவை செயல்படுத்த தயராக உள்ள நிலையில், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற முடியாது. எனவே, பெயர்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி சென்னை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. அவகாசம் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “ இரண்டு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் நிதி தேவைப்படும்,” என வாதிட்டார். இதையடுத்து மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்–முதல்வா் பெருமிதம்

MUST READ