spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் - வானதி சீனிவாசன்

நானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் – வானதி சீனிவாசன்

-

- Advertisement -

கல்வியில் தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடக்கூடாது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றும் திராவிடம் என்பது தென்னிந்திய நிலப்பரப்பு நானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.நானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் - வானதி சீனிவாசன் கோவை பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி  சீனிவாசன் எம்.எல்.ஏ, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் எமர்ஜியன்சியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்த எமர்ஜின்சி குறித்து குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட வானதி சீனிவாசன், காங்கிரசால் நெருக்கடிக்குள்ளான திமுக, தற்போது அவர்களோடு கூட்டணி வைத்திருப்பது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு வானதி,

we-r-hiring

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கல்வி நிதி மறுத்து தமிழ்நாட்டின் நெருக்கடிக்கு ஒன்றிய அரசாங்கம் உள்ளாக்குவது குறித்து கேட்டபோது, நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும்  மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டவரப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர்கள் கேட்ட போது கூட மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனது அரசின் தோல்விகளை மறைக்கவே திமுக மத்திய அரசை குறை கூறுகிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை. மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை. இப்போதுதான் வட மாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது. கல்வியில் தமிழ்நாட்டை பீஹார் மாநிலத்தோடு ஒப்பிடக்கூடாது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்ட வில்லை. தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.

முருகன் மாநாட்டால் அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி. கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது என தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் போதை பொருள் இளைஞர்கள் மத்தியில் தடுப்பதை தமிழக அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்புடன் இதை முற்றிலும் அழிக்க வேண்டும் முன்னாள் மத்திய மந்திரி ராசா தரக்குறைவான விமர்சனத்தை கைவிட வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.

மதுரை முருகன் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சனத்திற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திராவிடம் எதிர்ப்பு குறித்து வானதி சீனிவாசன் இடம் கேட்கப்பட்டது. அப்போது மழுப்பலாக பதில் அளித்தார். ஒரு கட்டத்தில் நானும் திராவிடம் அதில் என்ன சந்தேகம் பேசிய வானதி திராவிடம் என்பது தென்னிந்திய நிலப்பரப்பு என புரிந்து கொள்வதாக தெரிவித்தார்.

உரத்த குரலும்…சத்தமில்லாத சாதனையும்…

MUST READ