”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் ” என்னும் குறட்பாவிற்கு ஏற்ப,
கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, கொடும் பிணியில் சிக்கித் தவித்த மக்களை மீட்டெடுத்து, இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் விடியலாய் மே 7, 2021-ல் உதித்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதன் முதல்வராக பொறுப்பேற்றார் அண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைத் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பிறக்கும் குழந்தைத் தொடங்கி, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஓய்வுக்காக எதிர்நோக்கும் முதியோர் வரை ‘எல்லார்க்கும் எல்லாம்’என்பதை உறுதி செய்த நான்காண்டு சாதனை ஆட்சியினை நடத்திக் காட்டியவர் நமது முதல்வர்.
பொருளாதாரத்தில் 9.69%, உயர்கல்வியில் 51%, தொழில் வளர்ச்சியில், மனித வள மேம்பாட்டில், மருத்துவச் சேவையில் என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையின் புதிய முகமாய் வடித்தெடுத்திருக்கிறார் முதல்வர், அதேநேரத்தில்,
மாநில சுயாட்சி, ஜனநாயகம், மதசார்பின்மை இந்தியாவின் கூட்டாட்சிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ்நாட்டு முதல்வரின் கரங்களை வலுப்படுத்துவோம். ‘நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’” என்று கூறியுள்ளார்.