Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலகச் சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து முதலமைசர் வலியுறுத்தியுள்ளாா்.

உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை வர்த்தக மையத்தில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து வனத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

”இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அதிக திட்டங்கள் செயல்படுத்தபடுத்தும் மாநிலமாக தமிழ்நாட்டு திகழ்கிறது.  இன்று, உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல, நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது என்கிற கடினமான உண்மையை உணர வேண்டிய நாளும் கூட , குழந்தைகளின் எதிர்காலம் நாம் செய்யும் செயல்களில்தான் இருக்கிறது என்று கூறியுள்ளாா்.

மேலும், சுற்றுச் சூழலுக்காக மிகச் சிறந்த கட்டமைப்பை உண்டாக்கி இருப்பதாகவும், தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலமாக 10 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும் கூறியுள்ளாா் . சுற்றுச் சூழலை பாதுகாக்க அரசு நினைத்தால் மட்டும் போதாது, ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது துணிப்பை, தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என பேசியுள்ளாா்.”

வெளியே காந்தி! உள்ளே சாதி! பழ.கருப்பையா வீட்டில் வெடித்த சர்ச்சை!

MUST READ