
அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து குவித்ததாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் என்பவர், தாமாக முன்வந்து அமைச்சர் பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், டிசம்பர் 19- ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என்றும், தண்டனை விவரங்கள் டிசம்பர் 21- ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (டிச.21) காலை 10.00 மணிக்கு ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டனை விவரங்களை வாசித்தார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தண்டனை விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தரப்பு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.