spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!
File Photo

சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

we-r-hiring

“செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

இந்த நிலையில், இன்று அதிகாலை சோதனை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக இன்று (ஜூன் 14) காலை 06.00 மணியளவில் காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைதுக்கு விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பாதகம் விளைவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது எதிர்பார்த்தது தான்; தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை செய்வார்கள். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் ஐந்து விரல்கள் போல் செயல்படுகின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன் எம்.பி., “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், பா.ஜ.க. சித்து விளையாட்டைத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தது அநாகரீகத்தின் உச்சம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ