Homeசெய்திகள்தமிழ்நாடு"மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

“மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

-

 

"மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
File Photo

சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சோதனை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக இன்று (ஜூன் 14) காலை 06.00 மணியளவில் காரில் அழைத்துச் சென்றனர்.

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?- மு.க.ஸ்டாலின்

அப்போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் தீவி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல். ஜனநாயக நாட்டில் தான் நாம் இருக்கிறோமா என கேள்வி எழுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதை அடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ