Homeசெய்திகள்தமிழ்நாடு"நா.த.க.வின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி"- சீமான் குற்றச்சாட்டு!

“நா.த.க.வின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி”- சீமான் குற்றச்சாட்டு!

-

 

"நா.த.க.வின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி"- சீமான் குற்றச்சாட்டு!naa

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி நடப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்ட சாந்தன் அண்மையில் மறைந்த நிலையில், அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டம், சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி நடக்கிறது. சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துள்ளது. தேசிய கட்சி என்று பதிவுச் செய்தாலே அந்த கட்சிக்கு சின்னத்தை ஒதுக்க முடியுமா? ஆறு தேர்தலில் விவசாயி சின்னத்தில் நான் போட்டியிட்டுள்ளேன்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

தேசிய மலரான தாமரையை சின்னமாக பா.ஜ.க. பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் சின்னம் ஒதுக்கியது ஏன்?” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ