Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்'- தமிழக அரசு அறிவிப்பு!

‘தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்’- தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

'தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்'- தமிழக அரசு அறிவிப்பு!
File Photo

தமிழகத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த முனைவர் சைலேந்திர பாபு இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்று வயது சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், கடந்த 1990- ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராகப் பணியைத் தொடங்கியவர். அதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை காவல்துறை ஆணையாளராக சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் ‘மாமன்னன்’ திரை விமர்சனம்!

அதேபோல், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையாளராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பாணையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்.

MUST READ