spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு

-

- Advertisement -

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு

வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டமசோதா, சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

mkstalin

சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. இம்மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

we-r-hiring

இதனிடையே தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா,மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. மசோதாவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு சட்டத்திருத்த) முன்வரைவு 2023 தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 1948-ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி ஒரு நாளைக்கு 8 & 9 மணி நேரம் என வாரத்திற்கு 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இந்த வழக்கத்தை மாற்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என 4 நாட்களில் 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ