சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…
கடந்த பிப்ரவரி 09- ஆம் தேதி சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மூலம் கொண்டு வரப்பட்ட 280 கோடி ரூபாயை மதுபான தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் பணிகளுக்கு பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…
இதில் நீலக்கண்டன் என்பவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ய மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், கணக்கில் வராத அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.