
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

“கட்சியினர் அனைவருக்கும் தி.மு.க. பொதுவானது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆகஸ்ட் 03- ஆம் தேதி அன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை, நெல்லை இடையே விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை!
சோதனையின் போது கணக்கில் வராத ரூபாய் 22 லட்சம் ரொக்கம் மற்றும் ரூபாய் 16.6 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்தப் பொருட்கள் மற்றும் 60 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது”. இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


