ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரிக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் ST கொரியரில் இன்று (மார்ச் 14) காலை முதலே அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராயநகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் காலை 08.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.