Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…

வெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…

-

- Advertisement -

சென்னையில் மழையினால் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  வெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி அடித்து தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான நிதிபத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடக் கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில் குறிப்பாக வட சென்னையில் மழையினால் ஏற்படக் கூடிய வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையிலான கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 769 கி.மீ தூரத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 70 சதவீதத்திற்க்கும் மேலாக நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமான திட்டங்களை செயல்படுத்த கூடிய வகையில் நிதி ஆதாராங்களுக்காக தற்போது ரூ.200 கோடி மதிப்பீட்டில் நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடக் கூடிய நிகழ்வினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

உலக வங்கி உள்பட பன்னாட்டு வங்கிகளிடம் கடன் பெற்று அதிக சதவீதத்திலான வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளதை அடுத்து, மற்றொரு மாற்று ஏற்பாடாக தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பாண்டு மூலமாக நிதியை திரட்ட முடியும். அவ்வாறாக ரூ.200 கோடி மதிப்பிலான நிதி திரட்டப்பட்டு, வட சென்னையில் கொசஸ்தலை ஆறு வடிநீர், வடிநில பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஆதாரத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அறிக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்! கீழடி பெருசா வெடிக்கப் போகுது!

MUST READ